1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! விரைவில் ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெய் கிடைக்கும்..!

1

ரேஷன் கடை பயனாளர்களுக்கு குட் நியூஸ் ஒன்றை வழங்கியுள்ளார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா.

கோத்ரெஜ் குழுமம் சார்பில் தஞ்சாவூர் அருகே உள்ள ஈச்சங்கோட்டையில் பாமாயில் எண்ணெய் பனை விவசாயிகளுக்கான தீர்வு மையம் துவங்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளுக்கு தேவையான பாமாயில் எண்ணெய் பனை செடிகள், பராமரிப்பு கருவிகள், எண்ணெய் பனை விதைகள், அதற்கான உரங்கள் ஆகியவை உள்ளிட்டவை இந்த தீர்வு மையத்தில் வழங்கப்பட உள்ளது.

இந்நிகழ்ச்சியில் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும் போது, ' தமிழ்நாடு முதலமைச்சரின் நோக்கம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்க வேண்டும் என்பதுதான். இதற்காக டெல்டா பகுதிகளில் விவசாயம் சார்ந்த தொழில்கள், விவசாய பொருள்கள் மூலம் மதிப்புக்கூட்டுதல் போன்ற பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட உள்ளன.

டெல்டா மாவட்டங்களில் உள்ள விவசாயிகள், தாங்கள் விளைவித்த பொருட்களை விற்கும் தொழில் முனைவோராக மாற வேண்டும். விவசாயிகள் தங்களின் வருமானத்தை பெருக்கி கடன் கேட்பதை கைவிட்டு, அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்கும் வகையில் முன்னேற வேண்டும். எப்போது கடன் கேட்பது முழுமையாக நிறுத்தப்படுகிறேதா அன்றைக்குத்தான் விவசாயிகள் வளர்ச்சியடைந்துள்ளார்கள் என்று அர்த்தம்.

விவசாயிகள் உற்பத்தி செய்யும் நெல், கரும்பு, தேங்காய், பாமாயிலை மதிப்பு கூட்டும் பொருள்களாக மாற்ற வேண்டும். விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று ரேஷன் கடைகளில் தேங்காய் மற்றும் கடலை எண்ணெயை விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

இவ்வாறு அவர் பேசினார் 

Trending News

Latest News

You May Like