குட் நியூஸ்..! அரசு ஊழியர்களுக்கான முன்பணம் டபுள் மடங்காக உயர்வு..!

சட்டப்பேரவையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு ஊழியர்களுக்கு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அதிக கவனம் பெறுவதாக பண்டிகை கால முன்பணம் இருந்து வருகிறது.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் அரசு ஊழியர்களுக்கு பண்டிகை கால முன்பணம் 10 ஆயிரத்தில் இருந்து 20 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும் என்று அறிவித்துள்ளார். மேலும் 8 அறிவிப்புகளையும் அவர் வெளியிட்டுள்ளார். இதனால் அரசு ஊழியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பண்டிகை காலத்தில் ஏற்படும் செலவுகளை சமாளிக்கவும் மேலும் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் அரசு ஊழியர்களுக்கு உதவுவதே இதன் முக்கிய நோக்கமாக பார்க்கப்படுகிறது.