1. Home
  2. தமிழ்நாடு

குட் நியூஸ்..! இனி ஆண்டுக்கு இரு முறை மாணவர் சேர்க்கை..!

1

யுஜிசி தலைவர் மமிதாலா ஜெகதீஸ் குமார் கூறியதாவது: உயர்கல்வி நிறுவனங்கள் மாணவர் சேர்க்கையை ஆண்டுக்கு இரு முறை நடத்தி கொள்ளலாம்.

இது அடுத்த கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும். ஜன., பிப்., மற்றும் ஜூலை ஆக., மாதங்களில் மாணவர் சேர்க்கை நடக்கும். இதனால், தேர்வு முடிவு, உடல்நலக்குறைவு மற்றும் தனிப்பட்ட காரணங்களினால், பாதிக்கப்பட்ட மாணவர்கள் படிப்பை தொடர்வதற்கு ஏதுவாக இருக்கும். கல்வி நிறுவனங்களில் சேர மாணவர்கள் காத்திருக்கும் காலமும், நேரமும் குறையும். பட்டதாரிகளுக்கு வேலை வாய்ப்பை அதிகரிக்கும் வகையில், இனிமேல் நிறுவனங்கள் கல்வி நிறுவனங்களில் இரண்டு முறை கேம்பஸ் இண்டர்வியூ' நடத்திக் கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like