குட் நியூஸ்..! நாளை சென்னையில் இருந்து 1,265 சிறப்பு பஸ்கள் வெளியூர்களுக்கு இயக்கம்..!
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு நாளை 7-ம் தேதி 835 பஸ்களும், நாளை மறுநாள் 8-ம் தேதி 570 பஸ்களும் இயக்கப்பட உள்ளது.
சுபமுகூர்த்தம், வார இறுதி நாட்களையொட்டி நாளை 7-ம் தேதி, 8 மற்றும் 9-ம் தேதிகளில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 1265 சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
கோயம்பேட்டில் இருந்து நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூருக்கு இந்த இரு நாட்களும் 160 பஸ்கள் இயக்கப்படுகிறது. வரும் 10-ம் தேதி பள்ளிக்கூடம் திறக்க இருப்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் அண்டை மாநிலங்களில் இருந்து சென்னை திரும்ப 9-ம் தேதி 705 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இந்த நிலையில் நாளை 7-ம் தேதி (வெள்ளிக்கிழமை) முதல் ஞாயிற்றுக்கிழமை வரை பயணம் செய்ய 30 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். நீண்ட தூரம் பயணம் செல்லக் கூடியவர்கள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு www.tnstc.in மற்றும் மொபைல் ஆப் மூலம் முன்பதிவு செய்து பயணிக்கலாம். இவ்வாறு போக்குவரத்து துறை மேலாண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.