1. Home
  2. தமிழ்நாடு

உச்சம் தொட்ட ஒரு பவுன் தங்கம் விலை..! கடந்த 5 நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,760 உயர்வு

1

தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது.  சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது.

அந்த வகையில்,  சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே உயர்ந்து வருகிறது.  இந்நிலையில், மார்ச் 5 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 680 அதிகரித்தது.  இதையடுத்து, மார்ச் 6 ஆம் தேதி சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ரூ.6,040க்கும் மற்றும் சவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ. 48,320 க்கும் விற்பனையானது. மார்ச் 7ம் தேதி ரூ.400 மற்றும் மார்ச் 8 ஆம் தேதி ரூ.120-ம் உயர்ந்தது.

இந்நிலையில் நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.49,200-க்கும் கிராமுக்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,150-க்கும் விற்பனையானது.  கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,760 உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.  வெள்ளி விலையும் சற்று உயர்ந்தது. கிராமுக்கு 20 பைசாக்கள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.79.20-க்கும் பார் வெள்ளி ரூ.79,200-க்கும் விற்பனையானது.

Trending News

Latest News

You May Like