1. Home
  2. தமிழ்நாடு

பகிரங்க மன்னிப்பு கேட்டார் ஞானவேல் ராஜா..!

1

இயக்குநர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இருவருக்கும் நீண்ட காலமாக பருத்திவீரன் படம் தொடர்பாகப் பிரச்சனை நடந்து வருகிறது. இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஞானவேல் ராஜா பேசிய போது அமீர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இயக்குநர் அமீர் ஒரு அறிக்கையை வெளியிட்டார். பருத்திவீரன் படத்தை இயக்கிய போது படத்தை சொன்ன தேதியில் இயக்குநர் அமீர் முடித்து கொடுக்கவில்லை எனவும், தவறான கணக்கு காட்டினார் எனவும் கூறி படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா குற்றச்சாட்டை முன் வைத்தார்.

இதனை தொடர்ந்து இயக்குநரும் நடிகருமான சசிகுமார், சமுத்திரக்கனி, பொன்வண்ணன், பாரதிராஜா, கரு.பழனியப்பன் உள்ளிட்ட பலர் அமீருக்கு ஆதரவாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

தொடர்ந்து தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவிற்கு எதிராக கண்டனங்கள் அதிகரித்து வந்த நிலையில் அமீர் குறித்துப் பேசியதற்கு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்

அதில், பருத்தி வீரன் பிரச்சனை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே அமீர் அண்ணா என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.

அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தியது. அதற்கு பதில் அளிக்கும் போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான். நன்றி” என்று குறிப்பிட்டுள்ளார்.


 

Trending News

Latest News

You May Like