1. Home
  2. தமிழ்நாடு

பொங்கல் தொகுப்புடன் 2000 கொடுங்க... இல்லாவிட்டால் நீதிமன்றத்தை நாடுவோம் - பாஜக வழக்கறிஞர் ஏற்காடு மோகன் தாஸ்..!

11

வரும் 2025 ஜனவரி மாதம் வரவுள்ள பொங்கல் திருநாளை ஏழை எளிய மக்கள் சந்தோசமாக கொண்டாட அனைத்து ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்களோடு ரூபாய் 2000 உதவித்தொகை வழங்க கோரி பாஜக வழக்கறிஞர் ஏற்காடு ஏ மோகன் தாஸ் பாஜக சார்பாக தமிழக தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் மற்றும் ரேஷன் பொருட்கள் விநியோக த்துறைக்கு கோரிக்கை மனு ஒன்றை இன்று அனுப்பி உள்ளார்.

அந்த மனுவில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்கள் பொங்கல் பரிசு கொடுக்கும் வழக்கத்தை துவங்கி வைத்தார்.மறைந்த முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் ஆட்சிக் காலத்தில் பலமுறை பொங்கல் பரிசு பொருட்களோடு ரொக்க பணமும் கொடுக்கப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான ஆட்சியில் 2020 ஆண்டுக்கானபொங்கல் பரிசு பொருட்களோடு ரூபா 2000 ரொக்க தொகையும் கொடுக்கப்பட்டது.

கடந்த காலங்களில்ஆண்ட அதிமுக அரசும் சரி ஆளும் திமுக அரசும் சரி எப்போதெல்லாம் தேர்தல் வருகிறதோ அந்த ஆண்டு அப்போதெல்லாம் பொங்கல் பரிசு பொருட்களோடு ரொக்கத் தொகையும் கொடுத்து வருவதை வழக்கமாக வைத்திருந்தார்கள். வாக்காளர்களை கவரும் வண்ணம் இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.எப்போதெல்லாம் தேர்தல் வரவில்லையோ அப்போதெல்லாம் கஜானா காலி என்று சொல்லி ரொக்க தொகையை கொடுக்க மறுத்து வந்து உள்ளார்கள்.

கடந்த 2023 ம் ஆண்டு அனைத்து எதிர்கட்சிகளின் எதிர்ப்புக்கு பிறகு மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு பொங்கல் பரிசுகளோடு ரூபா 1000 ரொக்க தொகை கொடுக்கப்பட்டது.

ஆனால் தற்போது இந்த ஆண்டு வரும் பொங்கல் பண்டிகைக்கு பொங்கல் பரிசு பொருட்கள் மட்டும் விநியோகிக்கப்படும் என்றும் ரொக்கப்பணம் ஏதும் கொடுக்க முடியாது என்றும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டியளித்துள்ளார்.அதற்கு காரணம் தமிழக அரசின் கஜானாவில் பணம் இல்லை என்றும். வெள்ள நிவாரணத்துக்கு அதிக நிதி அளித்துள்ளதாக அந்த அறிவிப்பை கொடுத்துள்ளார்.
எப்போதெல்லாம் மக்கள் உதவித்தொகை மற்றும் நிவாரணத் தொகை கேட்கிறார்களோ அப்போதெல்லாம் ஆண்ட மற்றும் ஆளும் அதிமுக திமுக அரசுகள் கஜானாவில் பணம் இல்லை என்றும் மத்திய அரசை குறை சொல்வ தையே வாடிக்கையாக வைத்துள்ளார்கள் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

பாஜக வழக்கறிஞர் தனது கோரிக்கை மனுவில் கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு தமிழகத்தில் வெள்ளத்தால் அனைத்து தரப்பு மக்களும் ஏழை எளிய மக்கள், விவசாயிகள், கூலித் தொழிலாளிகள், பெண்கள் உள்ளிட்ட அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள்.மழை வெள்ளத்தால் தங்களது உடைமைகளை இழந் ந்துள்ளார்கள். விவசாயம் முற்றிலும் நலிவடைந்து விட்டது. விவசாய பயிர்கள் நாசமாகிவிட்டது.

எனவே பொங்கல் பரிசு தொகையோடு நிவாரணமாக பணம் கொடுக்கவில்லை என்றால் வரும் பொங்கல் பண்டிகையை மக்கள் சந்தோஷமாக கொண்டாட முடியாத நிலை உருவாகியுள்ளது எனவும்.ஆதலால் ஏற்கனவே கடந்த காலங்களில் வழங்கப்பட்ட முறையை போல் இந்த ஆண்டும் வரும் ஜனவரி 2025 பொங்கல் திருநாளை கொண்டாட ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கு தல ரூபா 2000 பண உதவி தொகையை பொங்கல் பரிசு தொகுப்போடு கொடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

தனது கோரிக்கை ஏற்கப்படாவிட்டால் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடி மக்களுக்காக தகுந்த நிவாரணத்தை பெற இருப்பதாக பாஜக வழக்கறிஞர் மோகன் தாஸ் கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like