10000000 முறை 'கோவிந்த கோடி' எழுதிய மாணவிக்கு வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் பங்கேற்க அனுமதி..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/f3c860378b6882bc9b32068098633383.jpg?width=836&height=470&resizemode=4)
மாணவர்கள், குழந்தைகள் மற்றும் இளம் பெண்கள் மத்தியில் ஆன்மிகத்தை வளர்க்க 'கோவிந்த கோடி' என்ற திட்டத்தை திருமலை - திருப்பதி தேவஸ்தானம் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்படி ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதுபவர்கள் வி.ஐ.பி. பிரேக் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள்.
இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த மாணவி குமாரி கீர்த்தன் ஒரு கோடி முறை கோவிந்த கோடி எழுதியுள்ளார். அவர் நேற்று முன்தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வி.ஐ.பி. பிரேக் தரிசனத்தில் சுவாமி தரிசனம் செய்தார்.