1. Home
  2. தமிழ்நாடு

கான் சாருக்கு 15,000 ராக்கிகளை கட்டிய மாணவிகள்..! யார் இந்த கான் சார்..?

1

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட தற்போது வைரலாகும் வீடியோவில், கான் சர் தனது மணிக்கட்டில் 15,000க்கும் மேற்பட்ட ராக்கிகளை மாணவிகள் கட்டியதாகவும், இதனால் அவர் வாயடைத்துப் போனதாகவும் தெரிவித்தார். "இன்று, என் மணிக்கட்டில் கட்டப்பட்ட ராக்கிகளின் எண்ணிக்கை 15,000க்கும் அதிகமாக இருந்தது. இந்த ராக்கிகள் மிகவும் கனமாக இருப்பதால் என்னால் கையை உயர்த்தக்கூட முடியவில்லை," என கூறினார். 

பீகாரை சேர்ந்த ஆசிரியர் கான். கான் சார் என தனது மாணவர்களால் செல்லமாக அழைக்கப்படும் இவர் தனியார் கல்வி நிறுவனம் அமைத்து போட்டி தேர்வுகளாக பயிற்சி அளித்து வருகிறார். குறைந்த கட்டணத்தில் அதிக மாணவர்களை படிக்க வைத்து கல்வி சேவை ஆற்றுகிறார். இவரிடம் படித்த பல மாணவர்கள் தற்போது அரசு அதிகாரிகளாக உள்ளனர்.

வடமாநிலத்தில் மூத்த சகோதர-சகோதரிகளுக்கு ராக்கி கயிறு கட்டி அன்பை வெளிப்படுத்தும் ரக்‌ஷா பந்தன் பண்டிகை கொண்டாடப்பட்டது.கான் சார் பயிற்சி மையத்தில் படிக்கும் மாணவிகள், சகோதரிகள் மத வேறுபாடின்றி சுமார் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் அவரை நேரில் சந்தித்து ராக்கி கயிறு கட்டினர்.

மாணவிகளின் அன்பால் கான் சார் திக்குமுக்காடி பேச்சே இல்லாமல் மகிழ்ச்சியில் திளைத்தார். இதுதொடர்பான வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. 

Trending News

Latest News

You May Like