1. Home
  2. தமிழ்நாடு

தியானம் செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய அர்ச்சகர் !

தியானம் செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய அர்ச்சகர் !


சென்னை போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் சந்திரமவுலி (50). இவர் அப்பகுதியில் உள்ள கோயில்களில் அர்ச்சகராக உள்ளார்.

அர்ச்சகர் சந்திரமவுலி மீது காட்டுப்பாக்கத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் ஒருவர் பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

தியானம் செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய அர்ச்சகர் !

அதில், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு, நான் சிறுமியாக இருக்கும்போது ஒருவரை காதலித்தேன். பிறகு அந்த காதலை கைவிட்டுவிட்டு மனஉளைச்சலில் இருந்தேன். அப்போது காதலை மறக்க என்ன செய்ய வேண்டும் கோயிலுக்கு சென்று அர்ச்சகர் என சந்திரமவுலியிடம் கேட்டேன் என தெரிவித்துள்ளார்.

அப்போது அர்ச்சகர், என்னை தனி அறைக்கு அழைத்து சென்று தியானம் செய்யும்படி கூறினார். மேலும், எனது உடைகளை கலைந்து சில்மிஷம் செய்தார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் அப்பெண் கோரிக்கை விடுத்தார்.

தியானம் செய்வதாக சிறுமிக்கு பாலியல் தொல்லை.. 3 ஆண்டுகளுக்கு பின் சிக்கிய அர்ச்சகர் !

அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய போலீசார் புகாரை உறுதி செய்தனர். அதன்பின்னர் கோயில் அர்ச்சகர் சந்திரமவுலியை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like