பெண் மாயம் !! வேறு ஒரு நபருடன் கள்ளக் காதலா ? என மாமியார் சந்தேகம் !! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..
![பெண் மாயம் !! வேறு ஒரு நபருடன் கள்ளக் காதலா ? என மாமியார் சந்தேகம் !! கடைசியில் என்ன ஆச்சு தெரியுமா..](https://newstm.in/static/c1e/client/106785/migrated/e9029ee0de9859fabb323f4bb24be0ac.webp?width=836&height=470&resizemode=4)
மகாராஷ்டிரா மாநிலம் ஜாபுவா மாவட்டத்தில் ஒரு பெண் தனது கணவருடன் வசித்து வந்தார். மேலும், கடந்த சில நாட்களாக அந்தப் பெண் காணாமல் போயிருந்தார். அதுமட்டுமின்றி, அந்த பெண்ணுக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருப்பதாக மாமியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்தப் பெண்ணின் பெற்றோர் அவளை மீண்டும் தனது கணவரின் வீட்டிற்கு அழைத்து வந்தனர். அப்பொழுது அவரின் மாமியார், தனது கணவரை தோளில் சுமந்து கொண்டு கிராமத்தை சுற்றி வருமாறு கூறினார்.
இதனால் தனது கணவரை அந்தப் பெண் தோளில் சுமந்து ஊரை சுற்றி வந்தார். இது தொடர்பான புகைப்படம் மற்றும் விடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. மேலும், இந்த சம்பவம் குறித்து கல்யாணபுரா காவல் நிலையத்தில் புகாரளித்தனர். இந்த வழக்கில் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
Newstm.in