1. Home
  2. தமிழ்நாடு

அலெக்ஸா உதவியுடன் குரங்கை விரட்டிய சிறுமி...ஆனந்த் மஹிந்திரா தந்த ஆஃபர்!

1

உத்திரபிரதேச மாநிலம் அவாஸ் விகாஸ் என்ற பகுதியில் உள்ள தனது சகோதரி வீட்டுக்குச் சென்ற நிகிதா என்ற 13 வயது சிறுமி, அங்கு குடும்பத்தினருடன் வீட்டில் இருந்திருக்கிறார். அப்போது தன் சகோதரி குழந்தையுடன் தனியாக ஒரு அறையில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, திடீரென சமையலறைக்குள் ஒரு குரங்கு நுழைந்துள்ளது. அச்சமயத்தில் குடும்பத்தினர் வேறு அறையில் இருந்ததால் குரங்கு வந்ததை யாரும் கவனிக்கவில்லை.

சமையலறையில் நுழைந்த குரங்கு வீட்டு பாத்திரங்கள் அனைத்தையும் தூக்கி வீசி இருக்கிறது. பின்னர் குழந்தையை நோக்கி குரங்கு வந்ததால், என்ன செய்வது என்று புரியாமல் நிகிதா அமைதியாக இருந்திருக்கிறார். குழந்தை குரங்கைப் பார்த்து அலறி அழுதிருக்கிறது.

அச்சமயத்தில் வீட்டின் பிரிட்ஜின் மேல் அலெக்சா சாதனம் இருப்பதைப் பார்த்த நிகிதா, அலெக்சா சாதனத்திடம் குரங்கை அச்சுறுத்தும் விதமாக சத்தம் எழுப்புமாறு கூறியுள்ளார். அதன்படி அலெக்சா சாதனம் நாய் குறைப்பது போன்ற ஒளியை எழுப்பியதால், குரங்கு அலறித்துடித்து அங்கிருந்து ஓடி இருக்கிறது.

இந்த நிகழ்வில் நிகிதா தனது சமயோஜித புத்தியால் குரங்கை விரட்டியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.  தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் நாம் நமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதற்கு இது ஓர் சிறந்த உதாரணமாக உள்ளது.

அலெக்ஸாவை அட்டகாசமாகப் பயன்படுத்திய நிகிதாவின் செயல் இணையவெளியில் பகிரப்பட்டு அனைவரும் பாராட்டி வந்தனர்.

இந்நிலையில், தற்போது இந்திய பில்லியனர் தொழிலதிபரும், மும்பையை தளமாகக் கொண்ட மகிந்திரா குழுமம் என்ற வணிக நிறுவனத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திரா அந்தச் சிறுமியை பாராட்டியதுடன், அவருக்கு எதிர்காலத்துக்கான ஜாப் ஆஃபரையும் வழங்க முன்வந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சிறுமி நிகிதாவின் இந்த சமயோசிதத்தைப் பாராட்டிய ஆனந்த் மகேந்திரா தனது எக்ஸ் வலைதளத்தில், "நம் காலகட்டத்தின் பெரிய கேள்வி என்னவெனில், மனிதகுலம் தொழில்நுட்பத்தின் அடிமையா? ஆண்டனா? என்பதுதான். ஆனால் இந்தச் சிறுமி தனது புத்திக் கூர்மையினால் தொழில்நுட்பத்தை மிகத் துல்லியமாக, சரியான தருணத்தில் பயன்படுத்த முடியும் என்று காட்டியுள்ளார். அவரது விரைவு கதி சிந்தனை அசாதாரணமானது. முற்றிலும் கணிக்க முடியாத இவ்வுலகில் நிகிதா காட்டியிருக்கும் இந்தத் திறமை தலைமைத்துவ பண்புகளுக்குரியது. நிகிதா தனது கல்வியை முடித்து விடும்போது அவர் கார்ப்பரேட் உலகில் பணியாற்ற விருப்பம் கொண்டால் அவரை எங்கள் நிறுவனத்தில் பணியில் சேர அழைக்கிறோம். அவரை நாங்கள் திருப்தி செய்ய முடியும் என்று நம்புகிறேன்" என்று பெருமையுடன் குறிப்பிட்டு உள்ளார்.


 

Trending News

Latest News

You May Like