1. Home
  2. தமிழ்நாடு

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி எரித்துக்கொலை.. தாத்தா, பேரன் கூட்டாக வெறிச்செயல் !

பாலியல் வன்கொடுமை செய்து சிறுமி எரித்துக்கொலை.. தாத்தா, பேரன் கூட்டாக வெறிச்செயல் !


பஞ்சாப் மாநிலம் தாண்டாப் பகுதியில் 3 நாட்களுக்கு முன்பு பாதி எரிந்த நிலையில் 6 வயது சிறுமியின் உடல் கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த மக்கள் போலீசாருக்கு தகவல் கூறினர்.

விசாரணை மற்றும் பிரேத பரிசோதனை அறிக்கையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக ஜலல்பூர் பகுதியைச் சேர்ந்த சுப்ரீத் சிங் மற்றும் அவரது தாத்தாவான சுர்ஜித் சிங் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொல்லப்பட்ட சிறுமியின் தந்தை கொடுத்த புகாரில் தாத்தா, பேரன் கைது செய்யப்பட்டுள்ளனர். அந்த புகாரில், கடந்த புதன் கிழமை மதிய வேளையில் தனது குழந்தைக்கு பிஸ்கட் கொடுப்பதாகக் கூறி, சுப்ரீத் சிங் குழந்தையை தூக்கிச் சென்றதாகவும் அதன் பின்னர் அவள் வீடு திரும்ப வில்லை.

இதனைத்தொடர்ந்து அவளது உடலானது பாதி எரியூட்டப்பட்ட நிலையில் சுப்ரீத் சிங்கின் மாட்டுக் கொட்டகைக்கு அருகில் கிடந்தது தெரிய வந்தது எனக் குறிப்பிட்டுள்ளார்.

புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்த போலீசார் பாலியல் வன்கொடுமை, படுகொலை, ஆதாரங்களை அழிக்க முற்படுதல் மற்றும் போக்சோ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like