1. Home
  2. தமிழ்நாடு

2 சிறுமிகளை ஆறு மாதங்களாக பாலியல் கொடுமை செய்த கும்பல்!



நாமக்கல் மாவட்டத்தில் 2 சிறுமிகளை ஆறு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்த 6 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்தனர்.

ராசிபுரம் அருகே 12 மற்றும் 13 வயதான இரண்டு சிறுமிகளை ஆறு பேர் கொண்ட கும்பல் 6 மாதமாக வன்கொடுமை செய்துள்ளது. இது தொடர்பாக 75 வயது முதியவர் முத்துசாமி உட்பட 6 பேர் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சிவா, சூர்யா, சண்முகம், மணிகண்டன், செந்தமிழ்செல்வம் ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

திண்டுக்கலில் சிறுமி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், இப்போது மீண்டும் ஒரு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like