1. Home
  2. தமிழ்நாடு

குப்பை லாரியில் விநாயகர் சிலைகள்; சர்ச்சையை ஏற்படுத்திய நகராட்சி ஊழியர்கள்..!

குப்பை லாரியில் விநாயகர் சிலைகள்; சர்ச்சையை ஏற்படுத்திய நகராட்சி ஊழியர்கள்..!


ஆந்திர மாநிலம் குண்டூரில், விற்பனைக்காக வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகளை குப்பை லாரியில் ஏற்றிச் சென்ற நகராட்சி ஊழியர்களின் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குண்டூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விநாயகர் சிலை தயாரிப்பாளர்கள் தாங்கள் தயார் செய்த விநாயகர் சிலைகளை நகரிலுள்ள சாலை ஓரத்தில் விற்பனைக்காக வைத்திருந்தனர்.

அப்போது அங்கு வந்த நகராட்சி ஊழியர்கள், விநாயகர் சிலைகளை விற்பனை செய்ய அனுமதி கிடையாது என்று கூறி, சிலைகளை குப்பை லாரியில் ஏற்றிச் சென்றனர். இதுதொடர்பாக விநாயகர் சிலைகளை விற்பனைக்காக வைத்திருந்தவர்களுக்கும் நகராட்சி ஊழியர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

சாலை ஓரத்தில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகளை குண்டூர் நகராட்சி ஊழியர்கள் நகராட்சிக்கு சொந்தமான குப்பை லாரியில் ஏற்றிச் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Trending News

Latest News

You May Like