காந்திஜி-யின் அரிய வகை ஒவியம் ரூ.1.7 கோடிக்கு விற்பனை..!
மகாத்மா காந்தியின் உருவப்படம் லண்டனில் ஆன்லைன் ஏலத்தில் மூன்று மடங்கு அதிக விலைக்கு, அதாவது £152,800க்கு இந்திய மதிப்பில் ரூ.1.7 கோடிக்கு விற்பனையானது. இதன் ஆரம்ப விலை £50,000-£70,000 இந்திய மதிப்பில் ரூ.57 லட்சம் முதல் ரூ.80 லட்சம் என்று மதிப்பிடப்பட்டிருந்தது.
பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கிளேர் லெய்டன் என்ற கலைஞர் இந்த ஓவியத்தை வரைந்தார். இந்த ஒவியம் காந்தி அமர்ந்து கொடுத்த ஒரே எண்ணெய் ஓவியம் என்று நம்பப்படுகிறது. இந்த ஓவியம் போன்காம்ஸ் (Bonhams) நிறுவனத்தால் ஏலம் விடப்பட்டது.
பிரிட்டிஷ் கலைஞரின் குடும்பத்தினர் கூறுகையில், மகாத்மா காந்தியின் இந்த ஓவியம் 1974-ஆம் ஆண்டு பொது பார்வைக்கு வைக்கப்பட்டபோது, ஒரு இந்து வலதுசாரி ஆர்வலரால் கத்தியால் குத்தி சேதப்படுத்தப்பட்டது. இதனால், ஓவியத்தில் சில இடங்களில் சேதம் ஏற்பட்டது. பின்னர் அது சரி செய்யப்பட்டது
இந்த ஓவியம் காந்தியின் வாழ்க்கையில் ஒரு முக்கியமான தருணத்தை பிரதிபலிக்கிறது. இது இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஒரு சாட்சியாகவும் விளங்குகிறது. இந்த ஓவியம் ஏலத்தில் அதிக விலைக்கு விற்பனையானது, காந்திக்கு இன்னும் இருக்கும் புகழையும், அவரது கொள்கைகளுக்கு இருக்கும் மதிப்பையும் காட்டுகிறது. இந்த ஓவியம் சேதமடைந்திருந்தாலும், அதன் வரலாற்று முக்கியத்துவம் காரணமாக அதிக விலைக்கு ஏலம் போனது. காந்தியின் உருவத்தை வரைந்த சில கலைஞர்களில் லெய்டனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆன்வைன் விற்பனையில் இதுவரை இல்லாத அளவுக்கு மகாத்மா காந்தியின் ஆயில் பெயண்டிங் விற்பனையில் முதல் இடம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.