கபடி போட்டியின் போது பார்வையாளர்களின் கேலரி இடிந்து விழுந்தது..!ரசிகர்களுக்கு காயம்..!

கர்நாடகா மல்லநாயக்கன கட்டே பகுதியில் கபடி போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண ஏராளமானோர் கூடியிருந்தனர்.
கபடி போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக திடீரென பார்வையாளர் கேலரி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.இதில் பலர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார், படுகாயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில், பாரம் தாங்காமல் கேலரி இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானது தெரியவந்தது.