விரக்தியாக ட்வீட் போட்ட அமலா பால்! திருமண செய்திக்கும் மறுப்பு!!
சுய அன்பு தான் எப்போதைக்குமான நடு விரல் என்று நடிகை அமலா பால் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதாவது நம்மை நாமே காதலித்தோமானால், யாரும் தேவையில்லை, எதையும் எதிர்கொள்ளலாம் என்பதே அதன் பொருள் என்று புரிந்து கொள்ளப்படுகிறது. ஆனால் அமலா பால் தனியாக நின்று கொண்டு இப்படி ட்வீட் போட என்ன காரணம் என்ற கேள்வியும் எழுகிறது. ஏனென்றால் இயக்குநர் ஏ.எல்.விஜய்யிடம் இருந்து விவாகரத்து பெற்ற அமலா பால், தீவிரமாக இயங்கி வந்தார். பயணம், திரைப்படம் என பல்வேறு செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து அவருக்கும், மும்பையை சேர்ந்த பாடகர் பவ்னிந்தர் சிங்குக்கும் திருமணம் நடந்ததாக புகைப்படங்கள் வெளியானது. ஆனால் அமலா பால் தரப்பு அதனை முற்றிலுமாக மறுத்துள்ளது. தனது இரண்டாவது திருமணம் குறித்த அறிவிப்பு நிச்சயம் விரைவில் அறிவிக்கப்படும் என நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார்.
Self Love is the greatest middle finger of all time. Work on you. For you. pic.twitter.com/mK13TtRmFz
— Amala Paul ⭐️ (@Amala_ams) April 22, 2020
newstm.in