1. Home
  2. தமிழ்நாடு

37 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் செய்யப்படும் “முந்தானை முடிச்சு”! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?

37 ஆண்டுகளுக்கு பிறகு ரீமேக் செய்யப்படும் “முந்தானை முடிச்சு”! ஹீரோ, ஹீரோயின் யார் தெரியுமா?


பாக்கியராஜ் இயக்கத்தில் அவரே நடித்து 1983ஆம் ஆண்டு வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.

பாக்யராஜ், ஊர்வசி நடிப்பில் வெளியான முந்தானை முடிச்சு திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. இன்றும் முந்தானை முடிச்சு திரைப்படத்திற்கு ரசிகர்கள் உண்டு. இந்நிலையில் அந்த படத்தை ரீமேக் செய்ய பாக்யராஜ் திட்டமிட்டு அதற்கான வேலைகளில் இறங்கினார். அதன்படி அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாக்யராஜ் அவர்களின் கதை, திரைக்கதை, வசனத்தில் முந்தானை முடிச்சு உருவாக உள்ளதாகவும், சசிகுமார், ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப்படத்தை யார் இயக்குவார்கள் என அறிவிக்கப்படாத நிலையில் அதுகுறித்து தகவல் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முந்தானை முடிச்சு படத்தில் இணைவது மகிழ்ச்சி என நடிகர் சசிகுமார், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like