திருத்துறைப்பூண்டி அருகே அரசு பஸ் - வேன் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலி..!

கேரள மாநிலத்திலிருந்து, வேளாங்கண்ணிக்கு காரில் சிலர் சுற்றுலா வந்தனர். திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி அருகே கார் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த வழியாக வந்த அரசுப் பேருந்தும், காரும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதியது. இந்த வாகனங்கள் மீது மேலும் ஒரு வாகனம் மோதி விபத்துக்குள்ளானது.
இதில், காரில் பயணித்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் காயமடைந்தனர்.
அந்த வழியாக சென்றவர்கள் காயமடைந்தவர்களை மீட்டு திருவாரூர் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு, அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்களின் சடலங்களை மீட்டு உடல்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.