1. Home
  2. தமிழ்நாடு

ஒரே நாளில் சென்னை - இலங்கை இடையே 4 விமானங்கள் ரத்து..!

1

சென்னையில் இருந்து இலங்கைக்கும், இலங்கையில் இருந்து சென்னைக்கும் ஒருகாலத்தில் ஏராளமான விமான சேவைகள் இருந்தன. சுற்றுலாக்காகவும், தொழில் ரீதியாகவும், படிப்பு ரீதியாகவும் ஆயிரக்கணக்கானோர் தினமும் இலங்கைக்கும், சென்னைக்கும் இடையே சென்று வந்தனர். ஆனால், கடந்த ஆண்டு இலங்கை திவாலானது முதலாக இந்தக் காட்சி தலைகீழாக மாறியது.

இந்நிலையில், சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று (ஜூன் 5) அதிகாலை 3.10 மணிக்கும், மாலை 4.10 மணிக்கும் இலங்கைகு புறப்பட்டு செல்ல வேண்டிய 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

அதேபோல, இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து நேற்று அதிகாலை 2.10 மணிக்கும், நேற்று மாலை 3.05 மணிக்கும் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து சேர வேண்டிய 2 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகள் விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. நேற்று ஒரே நாளில் சென்னை - இலங்கை இடையேயான 4 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் ரத்து செய்யப்பட்டு இருக்கின்றன. போதிய பயணிகள் இல்லாத காரணத்தாலேயே இந்த விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Trending News

Latest News

You May Like