1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி !! பொன். மாணிக்கவேலுக்கு திடீர் மாரடைப்பு....

முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி !! பொன். மாணிக்கவேலுக்கு திடீர் மாரடைப்பு....


2018 ம் ஆண்டு நவம்பர் மாதம் காவல்துறையில் இருந்து ஓய்வு பெற்ற ஜ.ஜி பொன்.மாணிக்கவேலின் சேவை நாட்டுக்கு தேவை என்பதால், மேலும் ஓராண்டு காலம் பணி நீட்டிப்பு வழங்கி நீதிபதிகள் மகாதேவன், ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கப்பட்டது.

முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி !! பொன். மாணிக்கவேலுக்கு திடீர் மாரடைப்பு....

மேலும் , சில மாதங்கள் பணியாற்றி விட்டு அவர் ஓய்வு பெற்றுள்ளார். 1958ம் ஆண்டு பிறந்த பொன் மாணிக்கவேல், 1989ல் குரூப் 1 அதிகாரியாக தேர்வடைந்து, நேரடியாக தமிழக காவல்துறையில் டிஎஸ்பியான சேர்ந்தார்.

இதைத் தொடர்ந்து, ஐபிஎஸ் தேர்ச்சியடைந்த அவர், கோவை குண்டு வெடிப்பு வழக்கில் சிறப்பாக துப்பு துலக்கியதில் பாராட்டு பெற்றார்.சேலம் மாவட்ட எஸ்பி, உளவுப்பிரிவு டிஐஜி, சென்னை மத்திய குற்றப்பிரிவு இணை ஆணையர் உள்ளிட்ட பதவிகளை வகித்தார்.

இதைத் தொடர்ந்து, பொன் மாணிக்கவேல் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவின் சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டார். இவரது தலைமையின் பணியாற்றிய குழுவின் மூலம், தமிழகத்தில் திருடுபோன பழமையான கோயில் சிலைகள் மீட்கப்பட்டன.

இந்த நிலையில், முன்னாள் சிலை கடத்தல் பிரிவு ஐஜி பொன். மாணிக்கவேலுக்கு திடீரென நெஞ்சிவலி ஏற்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Newstm.in

Trending News

Latest News

You May Like