முன்னாள் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டில் மருத்துவமனையில் அனுமதி!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9f34bbdac15a18b597fa84e27ab612ec.webp?width=836&height=470&resizemode=4)
கடந்த 2007ம் ஆண்டு முதல் 2012ம் ஆண்டுவரை இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவராக பதவி வகித்திருக்கிறார் பிரதீபா பாட்டில்.
இவருக்கு கடந்த சில நாட்களாக உடல்நிலையில் பிரச்னை இருந்து வந்திருக்கிறது. இதனையடுத்து நேற்று புனேவில் உள்ள பார்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது தொடர் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
காய்ச்சல், நெஞ்சு வலி ஏற்பட்டதையடுத்து, நேற்றிரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.