1. Home
  2. தமிழ்நாடு

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் குரேஷிக்கு 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட தடை..!

1

பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சராக பதவி வகித்தவர் ஷா மஹ்மூத் குரேஷி. பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி துணைத் தலைவராக உள்ளார். முன்னாள் பிரதமர் இம்ரான்கான் அமைச்சரவையில்  2018 முதல் 2020 வரை வெளியுறவுத்துறை அமைச்சர் உள்பட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார்.

சைபர் கிரைம் வழக்கு தொடர்பாக போலீசாரால் கைது செய்யப்பட்ட மஹ்மூத் குரேஷி, சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அடியாலா சிறையில் அடைக்கப்பட்டார். பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்பட்டதில் அவருக்கு ஜாமீன் கிடைத்தது. 

அதை தொடர்ந்து அடியாலா சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், பாகிஸ்தான் தேர்தல் ஆணையம் ஷா மெஹ்மூத் குரேஷியை 5 ஆண்டுக்கு தேர்தலில் போட்டியிட தகுதிநீக்கம் செய்துள்ளது. 

பாகிஸ்தானில் வரும் 8-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.  இந்த தேர்தலில் போட்டியிட முடியாதபடி 5 ஆண்டுகளுக்கு  குரேஷி தடை செய்யப்பட்டுள்ளார். சைபர் கிரைம் வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தால் குரேஷியின் தண்டனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

குரேஷி மற்றும் அவரது மகன் ஜெய்ன் குரேஷி ஆகியோரின் வேட்பு மனுக்கள் தேர்தல் அதிகாரியால் நிராகரிக்கப்பட்டன. முல்தான் உள்ளிட்ட 2  சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராக போட்டியிட அவர் மனு தாக்கல் செய்திருந்தார். அவரது மனு தேர்தல் அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டது. அவருக்கு பதிலாக  அந்தஇடத்தில் மாற்று  வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.  

Trending News

Latest News

You May Like