ஒடிஷா மாநில முன்னாள் ஆளுநர் முரளிதரன் சந்திரகாந்த் காலமானார்..!
முன்னாள் ஒடிஷா மாநில ஆளுநர் முரளிதரன் சந்திரகாந்த் பண்டாரே (95) வயது முதிர்வு காரணமாக காலமானார்.
மகாராஷ்டிராவின் மூத்த காங்கிரஸ் தலைவரான அவர், உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார். அத்துடன், 3 முறை மாநிலங்களவை எம்.பி.,யாகவும் பதவி வகித்திருக்கிறார். அவரது மறைவுக்கு முதல்வர் மோகன் சரண் மஜி, நவீன் பட்நாயக், சோனியா காந்தி உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.