1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கத்தின் ரூ.100 கோடி மதிப்பு சொத்துகள் முடக்கம்..!

Q

கடந்த 2011 - 2016 அ.தி.மு.க., ஆட்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக இருந்த வைத்திலிங்கம், தனியார் கட்டுமான நிறுவனத்திற்கு, அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் ஐ.டி., நிறுவனங்கள் கட்டுவதற்கு திட்ட அனுமதி வழங்க, 28 கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.அந்த பணத்தை, தனியார் கட்டுமான நிறுவனத்திடம் இருந்து, தன் தாய் முத்தம்மாள் பெயரில், மகன்கள் பிரபு, சண்முகபிரபு மற்றும் மைத்துனர் பன்னீர்செல்வம் ஆகியோர் நடத்தி வரும் நிறுவனம் வாயிலாக கடனாக பெற்றது போல கணக்கு காட்டியதாக, புகார் கூறப்படுகிறது. இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.
இந்த வழக்கு தொடர்பாக கடந்த ஆண்டு, அக்., மாதம் வைத்திலிங்கம் மற்றும் அவருக்கு சொந்தமான வீடுகளில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி பல முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்து இருந்தனர்.
இந்நிலையில், 2002ம் ஆண்டு பண மோசடிதடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்திலிங்கத்திற்கு சொந்தமான ரூ.100.92 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துகளை முடக்கி உள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.வைத்திலிங்கம் இப்போது, ஓ.பி.எஸ்., அணியில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like