முன்னாள் திமுக எம்.பி வேணுகோபால் காலமானார்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/fd3c99c49bb63752812a712c8274f6f6.jpg?width=836&height=470&resizemode=4)
திருவண்ணாமலை மற்றும் திருப்பத்தூர் தொகுதிகளில் வெற்றிபெற்று தொடர்ந்து 5 முறை எம்பியாக பதவி வகித்த திருவண்ணாமலை நாடாளுமன்றத் தொகுதியின் முன்னாள் உறுப்பினர் த.வேணுகோபால் உடல் நலக் குறைவால் காலமானார்.
திருப்பத்தூர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினராக 1996, 1998, 1999, 2004 என தொடர்ச்சியாக நான்கு முறை வென்று எம்.பியாக இருந்தவர் திமுகவின் த.வேணுகோபால். பின்னர் தொகுதி மறுசீரமைப்பில் திருப்பத்தூர் எம்.பி தொகுதி நீக்கப்பட்டது.
கடந்த 2009 நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு லட்சத்து 48 ஆயிரத்து 300 வாக்குகள் வித்தியாசத்தில் காடுவெட்டி குருவை தோற்கடித்தார் வேணுகோபால். 2009 லோக்சபா தேர்தலில் தமிழ்நாட்டிலேயே மிக அதிக வாக்கு வித்தியாசத்தில் வென்றவர் வேணுகோபால் தான்.
இவரின் மறைவு திமுக தொண்டர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.