1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு வழிபாடு..!

1

முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய நேற்று முன்தினம் இரவு வந்தார். திருச்செந்தூரில் தனியார் விடுதியில் தங்கிய அவர் நேற்று அதிகாலையில் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கடலில் தீர்த்தம் எடுத்து கொண்டு நேராக கோவிலுக்கு சென்று காலை 4 மணிக்கு விஸ்வரூப தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் சத்ரு சம்கார மூர்த்தி சன்னதிகளில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டார். தொடர்ந்து காலை 6 மணிக்கு மூலவருக்கு நடத்த அபிஷேகத்தில் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தார். 

சுவாமி தரிசனம் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு ஓ.பன்னீர் செல்வம் கூறுகையில், உலக மக்கள் நலம் பெற சுவாமி தரிசனம் செய்ததாக பதிலளித்தார்.  

Trending News

Latest News

You May Like