1. Home
  2. தமிழ்நாடு

முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு..!

1

ஆந்திர முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு, 73, திறன் மேம்பாட்டு கழகத்தில், 317 கோடி ரூபாய் முறைகேடு செய்தது தொடர்பான வழக்கில், அம்மாநில சி.ஐ.டி., போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சந்திரபாபு நாயுடுகோர்ட் காவல் நிறைவடைந்ததை அடுத்து நேற்று (05 ம் தேதி) மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை அக்.19-ம் தேதிவரை காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

முன்னதாக தன் மீதான வழக்கை ரத்து செய்யும்படி உச்சநீதிமன்றத்தில் சந்திரபாபு நாயுடு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் அனிருத்தா போஸ், எம்.திரிவேதி அமர்வு இடைக்கால ஜாமின் வழங்க மறுத்தது. விசாரணை அக்டோபர் 9ம் தேதிக்கு சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like