1. Home
  2. தமிழ்நாடு

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் !

அதிமுக முன்னாள் எம்எல்ஏ தனது ஆதரவாளர்களுடன் திமுகவில் இணைந்தார் !


தமிழக சட்டப்பேரவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. இதற்கு அரசியல் கட்சிகளின் கூட்டணி கணக்குகள் தொடங்கிய நிலையில் தேர்தல் பணிகளையும் சைலன்டாக தொடங்கியுள்ளனர்.

இதற்கு இடையில் மாற்றுக்கட்சியினர் இழுக்கும் முயற்சியும் ஒருபக்கம் நடந்து வருகிறது. அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகளில் இருந்து ஏராளமானோர் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அந்த வகையில் அதிமுக முன்னாள் எம்எல்ஏ மார்க்கண்டேயன் திமுகவில் இணைந்துள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் மார்க்கண்டேயன் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார்.

மார்க்கண்டேயன் தலைமையில் தொழிலதிபர்கள் கரையடிசெல்வன், கே.செல்வகுமார், அதிமுகவைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர்கள் இனாம் அருணாசலபுரம் ஆர்.துரைபாண்டியன், ஆற்றங்கரை வி.சீத்தாராமன், ரஜினி மக்கள் மன்ற விளாத்திகுளம் ஒன்றியச் செயலாளர் சி.விநாயகமூர்த்தி, ஒன்றிய இணைச் செயலாளர் அ.பாலமுருகன், மேலநம்பிபுரம் ஊராட்சி செயலாளர் எஸ்.பாலமுருகன், எஸ்.செல்வகுமார், அதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி தவசி ஆகியோரும் திமுகவில் இணைந்தனர்.

கட்சியில் இணைந்தவர்களை வரவேற்ற மு.க. ஸ்டாலின் அனைவருக்கும் திமுக உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

அப்போது தூத்துக்குடி எம்பி கனிமொழி, திமுக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச்செயலாளர் க.பொன்முடி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன், விருதுநகர் தெற்கு மாவட்டச் செயலாளர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அதேபோல சென்னை துறைமுகம் பகுதி அதிமுக முன்னாள் செயலாளரும், ஜார்ஜ்டவுன் நகர கூட்டுறவு வங்கி இயக்குநருமான எம்.வி.ஆர்.சரவணகுமாரும் ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். அப்போது சென்னை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் பி.கே.சேகர்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like