அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மருமகள் திடீர் உயிரிழப்பு..!
தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன். இவரது மகன் சசிமோகன்(32), மருத்துவக் கல்லுாரியில் படித்த போது, உடன் படித்த பூர்ணிமா(30), என்பவரைக் காதலித்து, நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
சந்தோஷமாக இருந்து வந்த இவர்களது குடும்ப வாழ்க்கையில் இப்போது மிகப்பெரிய சோகம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 18ம் தேதி பூர்ணிமா விளக்கு ஏற்றியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது ஆடையில் தீ பிடித்து பலத்த காயம் ஏற்பட்டது.
இதையடுத்து அவர் தர்மபுரியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பூர்ணிமாவுக்கு தீவிர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மருமகளின் இறப்பு அவரது குடும்பத்தில் மிகப்பெரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.