அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொலை மிரட்டல்..?
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/0f27c00453484d5772fec5ae23b28d61.jpg?width=836&height=470&resizemode=4)
முன்னாள் அமைச்சராக இருந்த சி.வி. சண்முகம், தற்போது மாநிலங்களவை உறுப்பினராகவும், அதிமுகவில் அமைப்பு செயலாளராகவும் உள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து, சி.வி. சண்முகம் பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு, வாட்ஸ் அப் காலில் சி.வி. சண்முகத்துக்கு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர், தனது பெயர் நவநீதன் எனக்கூறி, சி.வி. சண்முகத்தை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சி.வி. சண்முகத்தின் உதவியாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.