1. Home
  2. தமிழ்நாடு

பொதுமக்கள் யாரும் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திற்கு வர வேண்டாம்-வனத்துறை எச்சரிக்கை..!

Q

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சாஸ்தா கோயில் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத்தோப்பு வனப்பகுதிகளில் சமூகம் சார்ந்த சூழல் சுற்றுலா திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கட்டணத்துடன் வனப்பகுதியில் உள்ள ஆறுகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது.

பள்ளி விடுமுறை காலம் என்பதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள்

தற்போது பள்ளி விடுமுறை காலம் என்பதால் தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் ஆற்றில் குளிப்பதற்காக வந்த வண்ணம் உள்ளனர். மேலும் தாணிப் பாறையிலிருந்து சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சென்ற வண்ணம் உள்ளனர்.

இந்த நிலையில் மண்டல வானிலை ஆய்வு மையம் சார்பில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில் நாளை மற்றும் நாளை மறுநாள் கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக மலையடி வாரத்தில் உள்ள அருவிகள் மற்றும் நீரோடைகளில் நீர்வரத்து அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி இன்றும் நாளையும், பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி ரத்து செய்யப் படுவதாக வனத்துறை அறிவித்துள்ளனர்.

மேலும் தடையை மீறி வனப்பகுதிக்குள் நுழையும் மக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

Trending News

Latest News

You May Like