1. Home
  2. தமிழ்நாடு

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு , ரேசன் கடைகளில் வேலை !!

பிளஸ் 2 முடித்தவர்களுக்கு , ரேசன் கடைகளில் வேலை !!


நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் காலியாக உள்ள 122 விற்பனையாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

நிர்வாகம்: நியாய விலைக் கடை

பணி : விற்பனையாளர்

காலியிடங்கள்: 122

தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.nagapattinam.nic.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை தெளிவாக பூர்த்தி செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: குறுகிய பட்டியல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் ரூ.100 செலுத்த வேண்டும். மற்ற பிரிவைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை. 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: மண்டல இணைப்பதிவாளர், தலைவர், நாகப்பட்டினம் மாவட்ட ஆள்சேர்ப்பு நிலையம், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், அறை எண் 303, 3ம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், நாகப்பட்டினம் 611003

மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.nagapattinam.nic.in என்னும் அதிகாரப்பூர்வ லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 15.07.2020

Newstm.in

Trending News

Latest News

You May Like