1. Home
  2. தமிழ்நாடு

முதல்முறையாக தமிழகத்தில் நடக்கும் இன்டியா கூட்டணி..!

1

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை தோற்கடிக்க காங்கிரஸ், தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் உள்பட பல்வேறு கட்சிகள் இணைந்து இன்டியா கூட்டணியை உருவாக்கி உள்ளனர். இந்த கூட்டணி கட்சிகளுக்கிடையே தொகுதி பங்கீட்டில் இழுபறி நிலையே நீடிக்கிறது. மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தனித்து போட்டியிடுவேன் என்று அறிவித்து உள்ளார்.

இந்த கூட்டணியில் பிரதான கட்சியான தி.மு.க. உறுதியாக உள்ளது. அதே நேரம் இங்கும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இதுவரை நடக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கிடையில் கடந்த டிசம்பர் மாதமே திருச்சியில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் நடத்த இருந்த 'வெல்லும் ஜனநாயகம் மாநாடு' இந்த மாதம் 26-ம் தேதி நடக்கிறது.

இந்த மாநாட்டுக்கு கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டுள்ளார்கள். காங்கிரஸ் தலைவர் கார்கே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் டி.ராஜா, சி.பி.ஐ. (எம்.எல்) திபாங்கர் பட்டாச்சார்யா உள்பட பலர் கலந்து கொள்கிறார்கள். பிரமாண்டமாக நடைபெற உள்ள பொதுக்கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முன்னிலை வகிக்கிறார்.

இன்டியா கூட்டணி கட்சிகள் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெறும் முதல் பொதுக் கூட்டம் இது. இதுபற்றி விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் கூறும்போது, இது எதிர்க் கட்சி கூட்டணியின் பிரசாரத்தின் தொடக்கமாகத் தான் பார்க்கப்படும். நிச்சயமாக தேசிய அளவில் இன்டியா கூட்டணியின் வேகத்தை அதிகரிக்கும் என்றார்.

Trending News

Latest News

You May Like