1. Home
  2. தமிழ்நாடு

முதல் முறையாக அப்பா இல்லாமல் வாக்களிக்க வந்துள்ளேன்... கண் கலங்கிய விஜய பிரபாகரன்..!

1

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரது மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர் இன்று சென்னையில் உள்ள சாலிகிராமம் வாக்குச் சாவடியில் தங்களது வாக்குகளை பதிவு செய்தனர். பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்து மூவரும் தங்களது வாக்குகளை செலுத்தினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய விஜய பிரபாகரன், ”ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு அப்பா எனது கையைப் பிடித்து அழைத்து வந்து வாக்களிக்க சொல்லிக் கொடுப்பார். முதல் முறையாக அப்பா இல்லாமல் வாக்களிக்க வந்துள்ளேன். நான் வேட்பாளராக களமிறங்கி உள்ள தேர்தலில் அப்பா இல்லாதது மிகுந்த வருத்தம் அளிக்கிறது. விருதுநகரில் எனது வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தமிழ்நாடு முழுவதும் அதிமுக கூட்டணியின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது” என்றார்.

Trending News

Latest News

You May Like