கால்பந்து ஜாம்பவான் மரியோ ஜகாலோ காலமானார்.!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9cfae18b7812e96a3443037189bc47ab.jpg?width=836&height=470&resizemode=4)
கால்பந்து ஜாம்பவான் மரியோ ஜகாலோ நேற்று வெள்ளிக்கிழமை தனது 92 வயதில் காலமானார்.
பிரேசில் அணிக்காக ஜகாலோ ஒரு வீரராக இரண்டு உலகக் கோப்பைகளை வென்றார்.
1970ஆம் ஆண்டில் ஒரு வீரராக கால்பந்து பயணத்தை தொடங்கிய அவர், பயிற்சியாளர், அணியின் மேலாளர் என பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். அதுமட்டுமல்ல, இன்று உலகமே கொண்டாடும் ரொனால்டோ உள்ளிட்ட பல முன்னணி வீரர்களை உருவாக்கியவர். அவரது மறைவிற்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.