1. Home
  2. தமிழ்நாடு

FLASH: பாக்., ட்ரோன்களை அழித்த இந்தியா!

Q

பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் தாக்கி அழித்தது. இதனால், நிலைகுலைந்து போயுள்ள பாகிஸ்தான் பதிலடி கொடுக்க போவதாக கூறியது. நேற்று 15 இந்திய நகரங்களை நோக்கி பாக்., ராணுவம் வீசிய ஏவுகணைகளை நமது ராணுவம் இடைமறித்து அழித்தது.
இந்நிலையில், இன்று இரவு பாகிஸ்தான் ராணுவம் தற்கொலை டிரோன்களை பயன்படுத்தி தாக்குதல் நடத்த முயற்சித்தது. குறிப்பாக ஜம்மு விமான நிலையம், சுஞ்சுவன் ராணுவ தளம்ல சம்பா தேசிய நெடுஞ்சாலை, ஆர்னியா ராணுவ தளம் உள்ளிட்ட பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களை குறிவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டது. உடனடியாக அபாயத்தை மக்களுக்கு உணர்த்தும் விதமாக ஏர் சைரன் ஒலிக்கவிடப்பட்டது. அக்னூர் பகுதியில் சைரன் சத்தம் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
பஞ்சாபில் தல்வாரா மற்றும் ராஜஸ்தானின் ஜெய்சால்மர் ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் முயற்சித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
உடனடியாக எஸ் 400 மற்றும் ஆகாஷ் வான் பாதுகாப்பு கவச அமைப்புகள் மூலம் பாக்., தாக்குதலை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. ஜம்மு.ஆர்எஸ்போரா உள்ளிட்ட 3 இடங்களில் ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன. ஆறு இடங்களில் வெடிச்சத்தம் கேட்டதாக தெரியவந்துள்ளது.
இந்நிலையில், இரவு முழுவதும் மின்சாரத்தை நிறுத்தி வைக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பொது மக்கள் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளது.


 

Trending News

Latest News

You May Like