1. Home
  2. தமிழ்நாடு

கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்! ‘மஜா’ சென்டராக மாறிய மசாஜ் சென்டர்!!

கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்! ‘மஜா’ சென்டராக மாறிய மசாஜ் சென்டர்!!


மசாஜ் சென்டர் என்ற பெயரில் தெருவுக்கு தெரு விபச்சாரம் படுஜோராக நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் தற்போது 500க்கும் மேற்பட்ட மசாஜ் சென்டர்கள் உள்ளன. அதில் பெரும்பாலான மசாஜ் சென்டர்களில் பாலியல் தொழில் படுஜோராக நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது மசாஜ் குறித்து எதுவும் அறியாத பெண்கள் இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படுகின்றனர். போலீசார் ஒரு மசாஜ் சென்டருக்கு மாதம் ரூ.25 ஆயிரம் பணம் வீதம் வசூலித்து வருவதாகவும், இதனால் தான் தெருவுக்கு தெரு மசாஜ் சென்டர்கள் தொடங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

கொடிகட்டி பறக்கும் விபச்சாரம்! ‘மஜா’ சென்டராக மாறிய மசாஜ் சென்டர்!!

இதே போல் சில மாதங்களுக்கு முன் தஞ்சையில் காவல்துறை நடத்திய சோதனையில் 19 பேர் கைது செய்யப்பட்டனர்.பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 9 பெண்கள் மீட்கப்பட்டனர்.

அதேபோல் திருச்சியில் ஸ்பா மற்றும் ஆயுர்வேத மசாஜ் சென்டர்கள் என்ற பெயரில் பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. காவல்துறை நடத்திய அதிரடி சோதனையில் 5 பேரை கைது செய்யப்பட்டனர். 10 பெண்களை போலீஸார் மீட்டனர்.

இதுபோல் பல நகரங்களிலும் மசாஜ் சென்டர் என்ற பெயரில் விபச்சாரம் அமோகமாக நடைபெற்று வருவதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like