லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயால் 5 பேர் உயிரிழப்பு..!
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மாகாணத்தில் காட்டுத்தீ பரவியது. சக்திவாய்ந்த காற்று மற்றும் வறண்ட சூழ்நிலைகளால் தூண்டப்பட்ட காட்டுத் தீ, ஏற்கனவே சாண்டா மோனிகா மற்றும் மாலிபு இடையே 1,262 ஏக்கர் பகுதிகளை எரிந்துவிட்டது. இந்த காட்டுத்தீயால் மேலும் அழிவு அபாயத்தை அதிகரிக்கும் என்றும் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்தனர்.
காட்டுத்தீ குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஹாலிவுட் ஹில்ஸில் சன்செட் தீ என்று அழைக்கப்படும் ஒரு புதிய தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
சன்செட் தீயின் தற்போதைய அளவு 20 ஏக்கராக அதிகரித்து ரன்யான் கேன்யன் மற்றும் வாட்டில்ஸ் பூங்காவிற்கு இடையில் எரிகிறது.
ஹாலிவுட் சின்னத்தைத் தவிர, ஆண்டுதோறும் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெறும் டால்பி தியேட்டரும் சன்செட் தீயால் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது.
ஹாலிவுட் பவுல் வெளிப்புற ஆம்பி தியேட்டர் மற்றும் ஹாலிவுட் வாக் ஆப் பேம் உள்ளிட்ட லாஸ் ஏஞ்சல்ஸின் பிற அடையாளங்களும் ஆபத்தான நிலையில் உள்ளன.
புதன்கிழமை மாலை, புதிய தீ விபத்து காரணமாக, பிரபலங்களின் குடியிருப்புகள் அமைந்துள்ள ஹாலிவுட் பவுல்வர்டுக்கு தெற்கே லாரல் கேன்யன் பவுல்வர்டு மற்றும் முல்ஹோலண்ட் டிரைவின் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போரை கட்டாயமாக வெளியேற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன.
தெற்கு கலிபோர்னியா முழுவதும் வசிக்கும் சுமார் 1 கோடியே 70 லட்சம் பேர் புகை மற்றும் தூசி எச்சரிக்கையின் கீழ் உள்ளனர்.
நேற்று பிற்பகல் நிலவரப்படி, 15 லட்சத்திற்கும் அதிகமானோர் மின்சாரம் இன்றி தவித்தனர்.
லாஸ் ஏஞ்சல்ஸில், தீயணைப்பு வீரர்களும் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நீச்சல் குளங்கள் மற்றும் குளங்களில் இருந்து தண்ணீரை எடுக்க முயன்றனர்.
நடிகர்கள் பில்லி கிரிஸ்டல், மாண்டி மூர், ஜேமி லீ கர்டிஸ் மற்றும் பாரிஸ் ஹில்டன் உட்பட பல ஹாலிவுட் பிரபலங்கள், காட்டுத்தீ காரணமாக தங்கள் வீடுகளை இழந்துள்ளனர், அதே நேரத்தில் ஆடம் சாண்ட்லர், பென் அப்லெக், டாம் ஹாங்க்ஸ் மற்றும் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் ஆகியோரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குடியிருப்புகளைக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.