1. Home
  2. தமிழ்நாடு

ஆஸ்திரேலியாவில் மீன் மழை கொட்டியது... அது என்ன மீன் மழை தெரியுமா ?

1

ஆஸ்திரேலியாவின் லஜமானு என்கிற சிறிய நகரத்தில்தான் இந்த மீன் மழை அதிசயம் கடந்த 2023 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்தது.மீன் மழை பெய்து ஓய்ந்ததும் பொதுமக்கள் வீதிக்கு வந்து, வீதிகளில் சிதறிக் கிடந்த மீன்களை  பெட்டி பெட்டியாகவும், கூடை, கூடையாகவும் போட்டி போட்டுக்கொண்டு அள்ளிச் சென்றனர். சிறியதும், பெரியதுமாக வானிலிருந்து கொட்டிய அந்த மீன்களில் பல உயிரோடு துள்ளிக்குதித்தன.

இந்த மீன் மழை மக்களின் பசியாற்ற இறைவன் விண்ணிலிருந்து கொட்டியது என உள்ளூர் மக்கள் பலர் பேசிக்கொண்டாலும், இதற்கு பின்னால் உள்ள அறிவியலை வல்லுநகர்கள் விளக்கினர்.

 பொதுவாக  டெர்னாடோ என்று அழைக்கப்படும் பெரும் சூறாவளி ஏற்படும் சமயங்களில் குளங்கள், ஏரிகள், உள்ளிட்ட நீர்நிலைகளில் உள்ள நீரையும், கடலில் உள்ள நீரையும் வாரிச்சுருட்டி எடுத்துச் செல்லும்,  அவ்வாறு எடுத்துச்செல்லப்படும்போது அந்த நீர் நிலைகளில் உள்ள மீன்கள் உள்ளிட்ட உயிரினங்களும் அந்த தண்ணீரோடு சேர்த்து சூறாவளியால் விண்ணுக்கு எடுத்துச் செல்லப்படும், இவ்வாறு மீன்களை உறிஞ்சி எடுத்துச் செல்லும் டொர்னாடோ சிறிது நேரத்தில் வலுவிழக்கும்போது மீன்கள் மீது அதன் பிடிமானம் தளர்ந்து அவை வானிலிருந்து கொட்டும், இதையே மீன் மழை என்று அழைப்பார்கள் என்று விளக்கம் அளித்தனர் 

1

ஆஸ்திரேலியாவின் லஜமானு பகுதியில் இதுபோன்று மீன் மழை பெய்வது இது முதல்முறையல்ல,  கடந்த 2010ம் ஆண்டும் இது போன்று மீன் மழை பெய்துள்ளது. அதற்கு முன்பு 2004ம் ஆண்டிலும் 1974ம் ஆண்டிலும்   மீன் மழை பெய்ததாக லஜமானு பகுதியில் நீண்ட காலம் வசிக்கும் மக்கள் நினைவு கூறுகின்றனர். இந்தியாவிலும் கேரளா, தெலங்கானா உள்ளிட்ட இடங்களில் இதுபோன்று மீன் மழை பெய்துள்ளது.

சூறாவளிக் காற்றின் வேகம் மீன்களை மட்டுமல்ல, தவளைகள், சிறிய பறவைகளைக் கூட விண்ணுக்கு ஈர்த்துச் சென்றுவிடும். இப்படி தவளைகள் டொர்னாடோ சூறாவளியால் விண்ணில் ஈர்த்துச் செல்லப்பட்டதன் எதிரொலியாக கடந்த 2005ம் ஆண்டு செர்பியாவின் ஒட்சாஸி என்கிற சிறிய நகரத்தில் தவளை மழை பெய்துள்ளது.  இதே போல புழுக்கள் மழை, சிலந்தி மழை போன்றவை பெய்த அதிசயங்கள் எல்லாம் உலகில் நிகழ்ந்துள்ளன.

Trending News

Latest News

You May Like