புதிய குற்றவியல் சட்டத்தின் கீழ் கேரளாவில் முதல் வழக்குப்பதிவு..!
புதிய குற்றவியல் சட்டப்படி முதல் வழக்காக, கோழிக்கோடு நகரில் ஹெல்மெட் இல்லாமல் ஒரே பைக்கில் மூன்று பேர் சென்றதற்கு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை 1ம் தேதி நள்ளிரவு 12 மணிக்கு புதிய சட்டம் அமலுக்கு வந்த நிலையில், 12.20 மணி அளவில், சாப்பாடு வாங்குவதற்காக மூன்று பேர், பைக்கை மற்றொரு நண்பரிடம் கடன் வாங்கிச் செல்லும் போது ரோந்து போலீசாரிடம் பிடிபட்டுள்ளனர். இதையடுத்து, புதிய குற்றவியல் சட்டப்படி வழக்குப்பதிவு செய்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.