சென்னை அடையாற்றில் சென்று கொண்டிருந்த ஏசி பேருந்தில் தீ விபத்து..!
சென்னையில் அரசு பேருந்து பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
அடையாறில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த மாநகர பேருந்து திடீரென தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பிராட்வேயில் இருந்து சிறுசேரி வரை செல்லும் இந்த பேருந்து அடையாறு எல்.பி சாலையில் சென்றுகொண்டிருந்தபோது திடீரென தீ பிடித்து இருந்ததது.
தீ விபத்து ஏற்படப்போகிறது என்பதை அறிந்து பயணிகள் அனைவரும் முன்கூட்டியே பத்திரமாக இறக்கிவிடப்பட்டனர். CNG கேஸ் பொருத்தப்பட்ட இந்த பேருந்து முற்றிலுமாக எரிந்த நிலையில் தற்போது தீ அணைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.