விஜயவாடா பறவைகள் கண்காட்சி மைதானத்தில் பயங்கர தீ விபத்து..!

ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள சிதாரா மைய திடலில் பறவைகள் கண்காட்சி நடைபெற்று வந்தது. இந்நிலையில் இக்கண்காட்சி திடலில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு உடனியாக வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
தீ விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து மைதானத்தில் இருந்த பறவைகள், நெருப்புக்கோழிகள் உடனடியாக இடமாற்றம் செய்யப்பட்டன. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.