தனியார் மருத்துவமனையில் தீ விபத்து - 7 பேர் பலி..!
திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள சிட்டி எலும்பு முறிவு மருத்துவமனையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து 3 வயது சிறுவன் உள்பட 7 பேர் உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் போராடி தீயை அணைத்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தனியார் ஆம்புலன்ஸ் உட்பட 50-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் வரவழைக்கப்பட்டு, நோயாளிகளை வேறு மருத்துவமனைக்கு மாற்றும் பணி நடைபெற்று வருகிறது.