1. Home
  2. தமிழ்நாடு

உடனே வங்கி வேலையை முடிச்சிடுங்க..! 4 நாட்கள் சேவை முடங்கும் அபாயம்..!

Q

வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பு மார்ச் 24, 25 தேதிகளில் 48 மணி நேரம் வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளது. போராட்டத்தில் 8 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று தெரிகிறது.

போராட்ட அறிவிப்பு வெளியாகி உள்ள நிலையில், வங்கி பணிகள் 4 நாட்கள் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதம் 2 மற்றும் 4வது சனிக்கிழமை விடுமுறை. இம்மாதத்தில் மார்ச் 22ம் தேதி 4வது சனிக்கிழமையாகும். அதற்கு மறுநாள்(மார்ச் 23) ஞாயிறு விடுமுறை.

போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள மார்ச் 24 மற்றும் 25 தேதிகளில் வங்கிகள் இயங்காது. அந்த வகையில் ஒட்டுமொத்தமாக 4 நாட்கள் வங்கிகளில் சேவை இருக்காது.

தொடர்ந்து 4 நாட்கள் வங்கிகள் செயல்படாது என்பதால் வாடிக்கையாளர்கள் முன்கூட்டியே பண பரிவர்த்தனைகளை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

Trending News

Latest News

You May Like