1. Home
  2. தமிழ்நாடு

“கங்கனா உடன் போராடாமல், கொரோனாவை எதிர்த்து போராடுங்கள்”

“கங்கனா உடன் போராடாமல், கொரோனாவை எதிர்த்து போராடுங்கள்”


மத்தியப்பிரதேச முதல்வர் உத்தவ் தாக்கரே கொரோனாவை எதிர்த்து போராடுவதற்கு பதிலாக பாலிவுட் நடிகை கங்கனா உடன் போராடுகிறார் என அம்மாநில முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தை தொடர்ந்து பாலிவுட் திரையுலம் ஆட்டம் கண்டுள்ளது. சுஷாந்தின் இறப்புக்கு நீதி வேண்டும் என நடிகை கங்கனா தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். இதனிடையே அவர் மும்பை மாநகரம் குறித்து பேசியது சர்ச்சையானது. மும்பை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் போல் இருப்பதாக கூறியிருந்தார்.

இதனால் கங்கனாவுக்கும், சிவசேனா கட்சியினருக்கும் வார்த்தைப் போர் வெடித்தது. அதனைத் தொர்ந்து கங்கனா ரனாவத்துக்கு மத்திய அரசு ஒய் ப்ளஸ் பாதுகாப்பு அளித்துள்ளது. மேலும் சிவசேனா – கங்கான ரனாவத் இடையே உரசல் நீடிக்கவே செய்கிறது.

 இந்தவிவகாரம் தொடர்பாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதில், இந்தியாவிலேயே மகாராஷ்டிராவில் தான் அதிக கொரோனா பாதிப்பு இருக்கிறது என்றும், மொத்தம் பாதிப்பில் 40% இங்கு ஏற்பட்டுள்ளதாக கூறியுள்ளார் அதனால் மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே கங்கனா ரனாவத், மத்திய அரசுடன் போராடுவதை விட்டுவிட்டு கொரோனா வைரஸூடன் போராட வேண்டும் என கூறியுள்ளார்.

newstm.in

Trending News

Latest News

You May Like