1. Home
  2. தமிழ்நாடு

பாசப் போராட்டம்! தனக்கு பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்த தாய்!!

பாசப் போராட்டம்! தனக்கு பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்த தாய்!!


கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தனக்கு பிறந்த குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் சிவில் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட தாய்க்கு குழந்தைக்கு பிறந்தது. குழந்தையை சோதித்ததில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில் அந்த தாய் தனது குழந்தையை வீடியோ கால் மூலம் பார்த்துள்ளார். தாயும், பிறந்த குழந்தையும் தனி, தனி வார்டில் இருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்பட்டதாக மருத்துவமனை தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிறந்த குழந்தையை தூக்கிக் கொஞ்ச வேண்டும் என்று அனைத்து தாய்மார்களும் எதிர்பார்க்கும் நிலையில் கொரோனா காரணமாக அந்த தாய் குழந்தையை நெருங்க முடியாமல் இருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

Trending News

Latest News

You May Like