1. Home
  2. தமிழ்நாடு

விடைபெற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்... வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்!

விடைபெற்றார் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்... வழியனுப்பி வைத்த அமைச்சர்கள்!


கடந்த 2017-ம் ஆண்டு அக்டோபர் 6-ந்தேதி தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித், பஞ்சாப் மாநில ஆளுநராக மாற்றப்பட்டுள்ளார். நாகலாந்து ஆளுநராக இருந்த ஆர்.என்.ரவி, தமிழ்நாடு ஆளுநராக பொறுப்பேற்க இருக்கிறார்.

முன்னதாக பன்வாரிலால் புரோகித்தை முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினர்.

நேற்று பஞ்சாப் புறப்பட்ட பன்வாரிலால் புரோகித்தை தமிழ்நாடு அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் சென்னை விமான நிலையம் வரை சென்று வழியனுப்பி வைத்தனர். காலை 9 மணிக்கு சென்னையில் இருந்து சண்டிகர் புறப்பட்ட அவருக்கு காவல்துறை சார்பில் அணிவகுப்பு மரியாதை செலுத்தப்பட்டது.

Trending News

Latest News

You May Like