ஏதோ வருடத்திற்கு ஒரு ஹிட் கொடுப்பார் அவர் தானே ஏ.ஆர்.ரஹ்மான் என கூறிய பிரபல நடிகருக்கு ரசிகர்கள் கண்டனம்..!
தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா. இவர், புகழ்பெற்ற நடிகரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான என்.டி.ராமாராவின் மகன். அத்துடன், அரசியல்வாதியுமான இவர் எம்எல்ஏவாகவும் உள்ளார். பிரபலமான இவர், சர்ச்சையான கருத்துகளை கூறி பலரின் விமர்சனத்துக்கும் ஆளாகியுள்ளார்.
சமீபத்தில் இவர், தனியார் தெலுங்கு சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அதில், “யாரோ ரஹ்மான். அவர் யார் என்றே எனக்கு தெரியாது. அதை எல்லாம் நான் கண்டுக்க மாட்டேன். ஏதோ வருடத்திற்கு ஒரு ஹிட் கொடுப்பார். ஆஸ்கர் விருதை வென்றுள்ளார்” என்று பேசியுள்ளார்.
அதேபோல், “பாரத ரத்னா போன்ற விருதுகள் என்டிஆரின் கால் விரலுக்கு சமம், இந்த விருதுகள் என் காலடிக்கு சமம்; எந்த ஒரு உயரிய விருதும் என்னுடைய குடும்பம் தெலுங்கு திரையுலகிற்கு செய்த நன்மைக்கு ஈடாகாது. ஆகையால், இந்த விருதுகள் தான் வருத்தப்பட வேண்டுமே தவிர என் குடும்பமோ அல்லது என்னுடைய அப்பாவோ அல்ல” என பேசியுள்ளார். இவருடைய இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
How can a senior actor like #Balakrishna talk about Indian legend #ARRahman? Will people accept if a similar thing is being spoken by a Tamil actor on #Rajamouli? pic.twitter.com/ILMPDvjsVe
— Troll Cinema ( TC ) (@Troll_Cinema) July 20, 2021
“முன்னணி நடிகராக இருக்கும் ஒருவர், தன்னைப் போன்ற சக கலைஞர்களுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்” என்று, சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் கருத்து கூறி வருகின்றனர். ஏ.ஆர்.ரஹ்மான் ரசிகர்கள் இவரின் பேச்சால் கொதித்துப் போய் உள்ளனர். ஆஸ்கர் விருது வாங்கி இந்திய சினிமாவை உலக அரங்கில் தெரிய வைத்த ரஹ்மானை யாரென்று தெரியாது என்பதா..?” என கேள்வி எழுப்பிய ரசிகர்கள், “நடிகர் பாலகிருஷ்ணா மன்னிப்பு கேட்க வேண்டும்” என்றும் கூறி வருகின்றனர். அத்துடன், நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை இழிவுபடுத்திய பாலகிருஷ்ணாவுக்கு கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.